சிந்தனைவளம் (நூல்)
தோற்றம்
சிந்தனைவளம் | |
| நூலாசிரியர் | நா. பார்த்தசாரதி |
|---|---|
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| வகை | கட்டுரை |
| வெளியீட்டாளர் | தமிழ்ப்புத்தகாலயம் |
வெளியிடப்பட்ட நாள் | 1982 |
| பக்கங்கள் | 203 |
சிந்தனைவளம், நா. பார்த்தசாரதி எழுதிய நூல் ஆகும். இந்த நூல் நா. பார்த்தசாரதி 1978-1979களில் துக்ளக் இதழில் எழுதிய பல கட்டுரைகளைக் கொண்டுள்ளது. முதல் கட்டுரை "சமூகப் பொறுப்புக்களும் சராசரி இந்தியனும்" என்ற தலைப்பில் ஆரம்பிக்கின்றது. "எதையாவது எப்படியாவது" என்ற கட்டுரை இளைஞர்கள் கொள்ளும் தவறான துணிச்சலைச் சுட்டிக்காட்டுகிறது. "அபத்தமான மொழி பெயர்ப்புக்கள்", "ஆங்கிலமும் தாழ்வு மனப்பான்மையும்" போன்ற கட்டுரைகள் 1980களில் எழுதப்பட்டிருந்தாலும் இன்றளவும் நல்ல அறிவுரையைத் தருகின்றன.