சிங்கப்பூரில் தமிழில் கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்கப்பூரில் தமிழில் கல்வி என்பது சிங்கப்பூரில் 19, 20 ம் நூற்றாண்டுகளின் பெரும் பகுதியில் தமிழ் மொழியில் நடைபெற்ற கல்வியைக் குறிக்கிறது. சிங்கப்பூரில் முதலாவது தமிழ்ப் பள்ளி 1834 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடைசித் தமிழ்ப் பள்ளி 1985 ம் ஆண்டு மூடப்பட்டது. அரச ஆதரவு இன்மை, அரசியல் ஒடுக்குமுறைகள், திறனற்ற பாடத்திட்டங்கள், கல்விக்கூட வசதிகள் இன்மை, பெற்றோர் தெரிவு போன்ற பல்வேறு காரணங்களால் சிங்கப்பூரில் தமிழில் கல்வி மதிப்பிழந்து நின்றுபோனது.

வெளி இணைப்புகள்[தொகு]