சமூக தணிக்கை சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கம்[தொகு]

(Sasta)

தமிழ்நாடு சங்கங்கள் 'பதிவு சட்டம், 1975 ன் கீழ், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை தமிழ்நாடு அரசு நிறுவப்பட்டது. Sasta மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் (மாநில அரசுகளுக்கு) சரியாக செயல்படுத்த உறுதி தமிழ்நாடு மாநில 12.524 கிராம ஊராட்சிகளில் கிராம சபைகள் மூலம் சமூக தணிக்கை நடத்துவதனை.


தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பணிகள் அனைத்திற்கும் சம்பந்தப்பட்ட ஊராட்சியின் கிராமசபையில் ஒப்புதல் பெறப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலரால் பரிந்துரை செய்யப்பட்டு, மாவட்ட கலெக்டரால் நிர்வாக அனுமதி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் நீர்வளத்தை பாதுகாத்தல், நீர் பாசன கால்வாய்களை வெட்டுதல், நீர் நிலைகளை தூர் வாருதல், வடிகால் அமைத்தல், வெள்ள பாதுகாப்பு பணிகள், புதிய சாலைகள் அமைத்தல், சிறு பாலங்கள் அமைத்தல் மற்றும் பிற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இத்திட்டத்தின் பயன்கள் முழு அளவில் கிராமத்தில் உள்ள ஏழை மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வதற்கான சமூக தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சமூக தணிக்கை சங்கம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி அளவில் மக்களிடையே திட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், திட்ட நிதி முறையாக கையாளப்படுவதை உறுதி செய்தல் மற்றும் சமூக தணிக்கையின் மூலம் சரிபடுத்துதல் இதன் நோக்கம் ஆகும்.

சமூக தணிக்கை மேற்கொள்வதற்கு வசதியாக பணியாளர்களுக்கு விண்ணப்பபதிவு மற்றும் வேலை அடையாள அட்டை வழங்கும் பதிவேடு, வரவு செலவு பதிவேடு, குடும்ப வாரியாக வேலை வழங்கும் பதிவேடு, வேலை அடையாள அட்டை இருப்பு பதிவேடு, தினசரி வருகை பட்டியல் இருப்பு பதிவேடு. சொத்துபதிவேடு, புகார் மற்றும் பார்வையாளர் பதிவேடு ஆகிய ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும்.

இந்த ஆவணங்களுடன் வேலை செயல்படுத்தப்பட்ட பணிகளின் மதிப்புpட, நிர்வாக அனுமதி. தனிநபர் வேலை அடையாள அட்டை, தினசரி வருகை பட்டியல். அளவீட்டு புத்தகம் மற்றும் பணிகள் தொடர்பான இதர அனைத்து ஆவணங்களும் சமூக தணிக்கைக்கு எடுத்துச் கொள்ளப்படும். சமூக தணிக்கை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த கிராம ஊராட்சியில் உள்ள குடியிருப்பு வாரியாக அனைத்து பகுதிகளிலும் தகவல் தெரிவிக்கப்படும். சமூக தணிக்கையினை மேற்கொள்ள வீடுதோறும் சமூக தணிக்கை குழு வரும் நேரத்தில் பயனாளிகள் தங்களின் அட்டையை சமூக தணிக்கை குழுவிடம் காண்பிக்க வேண்டும்.

சமூக தணிக்கை குழு பணி நடைபெற்ற இடத்தில் பணி தொடர்பான அளவீடுகளை கூர்ந்தாய்வு செய்து ஊராட்சி அளவில் அறிக்கை தயார் செய்து சமூக தணிக்கை குழு வட்டார அளவிலான வல்லுநர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதனை தகவல் பலகையில் வெளியிடுதல் வேண்டும். சிறப்பு கிராம சபை கூட்டம் கூட்டப்பட்டு சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராம சபையில் வட்டார அளவிலான வல்லுநர்கள், பொதுமக்கள், சமூக தணிக்கை குழு உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிறப்பு பார்வையாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒருங்கிணைக்கப்பட்ட முடிவு அறிக்கை தயார் செய்து கலெக்டரின் பார்வைக்கு வைக்க வேண்டும்.

அறிமுகம் மற்றும் SASTA நோக்கம்[தொகு]

தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கம் (Sasta) தமிழ் கீழ் நிறுவப்பட்டது. நடத்துவதனை மாநில அரசு தமிழ்நாடு சங்கங்கள் 'பதிவு சட்டம் 1975 கிராம பஞ்சாயத்து கிராம சபைகள் மூலம் சமூக தணிக்கைகள். சமூகம் வசதியளிக்கும் சரியான உறுதி கிராம பஞ்சாயத்து கிராம சபைகள் மூலம் சமூக தணிக்கை நடத்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் செயல்படுத்த ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்கள் ஒப்புதல் என தமிழ்நாடு மாநில,. சமூகம் மகாத்மா காந்தி சமூக தணிக்கை கால நடத்தை வழங்குகிறது வாழ்வாதார மேம்பாட்டுக்கான உறுதி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம், மாநில கிராமப்புற பகுதிகளில் வீடுகளில் நிலையான சொத்துக்கள், பாதுகாப்பு உருவாக்கம் தமிழ்நாடு ஒவ்வொரு உத்தரவாத ஊதிய வேலைவாய்ப்பு குறைந்தது 150 நாட்கள் வழங்குவதன் மூலம் அதன் வயது உறுப்பினர்கள் திறமையற்ற கையேடு செய்ய மேற்கொள் ஒவ்வொரு வீட்டு, நிதி ஆண்டு வேலை மற்றும் அவ்விடத்திற்கு அவற்றோடு தொடர்புபட்ட அல்லது இடை வெளிவந்து கொண்டிருக்கின்றன. Sasta முக்கிய நோக்கம் உறுதி தொடர்ச்சியான பொது லஞ்ச ஒழிப்பு ஆகிறது திட்டங்கள் சட்டங்கள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்த பொறுப்பு. பணிகள் நடைபெற்று திட்டம் கிராம கால கூட்டப்பட்ட கூட்டங்கள் குறிப்பிடப்படுகிறது கீழ் சபா திட்டம் விதி MGNRES தணிக்கை குறிப்பிட்ட விதிகளை ஏற்ப.

==

கூலி உயா்வு[தொகு]

ஏப்ரல், 1ம் தேதி முதல், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தில், கூலித்தொகை, 148 ரூபாயில் இருந்து, 167 ரூபாயாக உயர்த்த, ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது; மேலும், 100 நாள் வேலையை, 150 நாட்களாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. ஒன்றிய அரசின், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், 2005ம் ஆண்டு, ஆக., 25ல் அமல்படுத்தப்பட்டது. இது, விவசாய பணிகள் இல்லாத காலத்தில், பொதுப் பணிகள் மேற்கொள்ளும் வகையில், கிராம மக்களுக்கு, 100 நாட்கள், வேலை அளிக்கும் திட்டமாக கொண்டு வரப்பட்டது. இத்திட்டம், நல்ல வரவேற்பு பெற்றதால், 2009, அக்டோபரில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. லோக்சபா தேர்தல் நெருங்கும் சமயத்தில், ஏப்ரல், 1ம் தேதி முதல், இத்திட்டத்தில், நாள் கூலித் தொகை, 148 ரூபாயில் இருந்து, 167 ரூபாயாக உயர்த்தி வழங்க, ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 100 நாட்கள் வேலை என்பதை, 150 நாட்களாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம், நீர் நிலைகள் தூர் எடுத்தல், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட, பொது பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. துவக்கத்தில், நாள் கூலி, 80 ரூபாயும்; அதன் பின், 119 ரூபாய், 132 ரூபாய் என உயர்ந்து, தற்போது, 148 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்நிலையில், 2015 ஏப்ரல் முதல், 183 ரூபாய் கூலி வழங்க, ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமூக_தணிக்கை_சங்கம்&oldid=2672820" இலிருந்து மீள்விக்கப்பட்டது