கே. பொன்னையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. பொன்னையா (K. Ponniah)(பிறப்பு, மார்ச் 17, 1914) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையினைச் சார்ந்தவர். உடுமலைப்பேட்டையிலும் கோயம்புத்தூரிலும் கல்வி பயின்றவர். இவர் 1962ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆனைமலை சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. (in English) Madras Legislative Assembly Who is Who 1962. Madras. April 1962 [1962]. பக். 252. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பொன்னையா&oldid=3422808" இலிருந்து மீள்விக்கப்பட்டது