குளம்பா தாயனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குளம்பா தாயனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். குளம்பா என்னும் ஊரில் வாழ்ந்தவர். சங்க நூல் தொகுப்பில் இவரது பாடலாக ஒன்றே ஒன்று மட்டும் இடம் பெற்றுள்ளது. அது புறநானூறு 253 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.[1]

புறநானூறு 253 சொல்லும் செய்தி[தொகு]

  • முதுபாலை என்னும் துறையைச் சார்ந்தது.

முதுபாலை என்பது கணவனுடன் வெளியூர் செல்லும்போது வழியில் பாலைநிலத்தில் மனைவி கணவனை இழந்து புலம்பும் நிலையைக் கூறுவது என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[2]

எனக்காக யாரும் அவலம் கொள்ளவேண்டா. போரில் வெற்றி கண்ட இளைஞர்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கும் நிலை நேர்ந்துள்ளது. மூங்கில் வெட்டுவோர் அதன் நெல்-கதிர்களை வெட்டி எறிந்து சிதறிக் கிடப்பது போல என் கையில் உள்ள வளையல்களைச் சிதறிக்கிடக்கும்படி உடைத்துப் போட்டுவிட்டு வெறுங்கையை வீசிக்கொண்டு என் சுற்றத்தாருடன் நான் வாழ்வேன் என நினைக்கிறாயா? சொல்லுங்கள். - இவ்வாறு ஒரு பெண் புலம்புவதாக இவரது பாடல் கூறுகிறது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. என் திறத்து அவலம் கொள்ளல், இனியே;
    வல ஆர் கண்ணி இளையர் திளைப்ப,
    'நகாஅல்' என வந்த மாறே, எழா நெல்
    பைங் கழை பொதி களைந்தன்ன விளர்ப்பின்,
    வளை இல், வறுங் கை ஓச்சி,
    கிளையுள் ஒய்வலோ? கூறு நின் உரையே!

  2. நனி மிகு சுரத்திடைக் கணவனை இழந்து
    தனி மகள் புலம்பிய முதுபாலையும் - தொல்காப்பியம் 3-77
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளம்பா_தாயனார்&oldid=3173547" இலிருந்து மீள்விக்கப்பட்டது