குற்றியலுகரம்-முற்றியலுகரம்-வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


குற்றியலுகரம்-முற்றியலுகரம்: வேறுபாடு

தனிநெடில் அடுத்தும் இரண்டுக்கும் மேற்பட்ட எழுத்துக்களைக் கொண்ட சொற்களின் ஈற்றிலும் வல்லின மெய்களாகிய க்,ச்,ட்,த்,ப்,ற் ஆகிய எழுத்துகளின் மேல்ஏறிவரும் உகரத்திற்கு 'குற்றியலுகரம் என்று பெயர்.

தனிநெடில் அடுத்து குற்றியலுகரம்[தொகு]

(எ-கா) நாடு ( ட் + உ )

சொல்லின் ஈற்றில் க்,ச்,ட்,த்,ப்,ற் எழுத்துகளின் மேல் ஏறிவரும் உகரம்[தொகு]

(எ-கா) கொக்கு ( க் + உ )

ஈரெழத்துச் சொல்லின் தனிக்குறிலை அடுத்து க்,ச்,ட்,த்,ப்,ற் எழுத்துகளின் மேல் ஏறிவரும் உகரமும் க்,ச்,ட்,த்,ப்,ற்-தவிர்த்த பிற மெய்யெழுத்துகளின் (இடையினமும் மெல்லினமும்) மேல் ஏறிவரும் உகரமும் முற்றியலுகரம் எனப்படும்.

தனிக்குறில் அடுத்து முற்றியலுகரம்[தொகு]

(எ-கா) அழு, மனு, கணு, பரு, உழு, பலு.

சொல்லின் ஈற்றில் க்,ச்,ட்,த்,ப்,ற்-தவிர்த்த பிற மெய்யெழுத்துகளின்மேல் ஏறிவரும் உகரம்[தொகு]

(எ-கா)மாவு, வாழு

வேறுபாடு[தொகு]

குற்றியலுகரம் க்,ச்,ட்,த்,ப்,ற் ஆகிய எழுத்துகளின்மேல் ஏறிவரும் உகரம்,(எ-கா) கொக்கு ( க் + உ ) தனிநெடில் அடுத்து குற்றியலுகரம்,(எ-கா) நாடு ( ட் + உ )

முற்றியலுகரம் க்,ச்,ட்,த்,ப்,ற்-தவிர்த்த பிற மெய்களின் மேல் ஏறிவரும் உகரம்,(எ-கா)மாவு, வாழு தனிக்குறில் அடுத்து முற்றியலுகரம்,(எ-கா)அது, அறு, மனு, கணு, பரு, உழு, பலு.


அடிக்குறிப்பு[தொகு] oJump up↑ குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும். தொல்காப்பியம் மொழிமரபு 34 oJump up↑ முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாஅது அப் பெயர் மருங்கின் நிலையியலான. தொல்காப்பியம் மொழிமரபு 35 oJump up↑ தொல்காப்பியம் நூன்மரபு 2 oJump up↑ யகரம் வரு வழி இகரம் குறுகும் உகரக் கிளவி துவரத் தோன்றாது. - தொல்காப்பியம் குற்றியலுகரப் புணரியல் 5 oJump up↑ யகரம் வர குறள் உ திரி இகரம் உம் அசைச்சொல் மியாவின் இகரம் உம் குறிய - நன்னூல் oJump up↑ வண்டலவர் கண்டே னியான் (கலித்தொகை 92

பார்வை நுால்கள்

நற்றமிழ் இலக்கணம்,டாக்டர் கோ. பரமசிவம், கவிக்குயில் பிரிண்டர்ஸ்,சென்னை,1975.

எளியஇனிய முறையில் தமிழ் கற்க கற்பிக்க, ஜோதிராஜன் பதிப்பகம், ஓசூர்,2014.

வெளி இணைப்புகள்[தொகு]