கிறிஸ்து பல்கலைக்கழகம்
![]() | |
குறிக்கோளுரை | சிறந்த மற்றும் சேவை |
---|---|
உருவாக்கம் | 15 சூலை 1969 |
துணை வேந்தர் | முனைவர் வண. தாமஸ் சி. மாத்தியூ[1] |
மாணவர்கள் | 12000 |
அமைவிடம் | பெங்களூர், கர்நாடகா, இந்தியா 12°56′5″N 77°36′19″E / 12.93472°N 77.60528°Eஆள்கூறுகள்: 12°56′5″N 77°36′19″E / 12.93472°N 77.60528°E |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | www |
கிறிஸ்து பல்கலைக்கழகம் (Christ University) இந்தியாவில் கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் அமைந்துள்ள தனியார் தன்னாட்சிப் பல்கலைக்கழகமாகும். இப் பல்கலைக்கழகம், 1969 ஆம் ஆண்டு, மேரி இம்மாகுலேட்டின்கார்மேலைட் பாதிரிகளால் நிறுவப்பட்டது. இது இந்தியாவில் உள்ள முதலாவது சிரியன் கத்தோலிக்க மத அமைப்பாகும். 2008 ஆம் ஆண்டில், இப்பல்கலைக்கழகத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. 2014 இந்தியா டுடே-நீல்சன் ஆய்வுகளின் படி, கிறித்து பல்கலைக்கழகம் இந்தியாவில் வணிக நிருவாகத்தில் முதலாவது நிலையிலும், கலையில் ஆறாவது நிலையிலும், அறிவியலில் 4வது நிலையிலும் உள்ளது.[2]
சட்டம், வணிக நிர்வாகம், பொருளியல், அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட பாடங்களில் இளநிலை, முதுநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
வளாகம்[தொகு]
இதன் வளாகம் 25 ஏக்கர் பரப்பளவை உடையது. 2009இல், மைசூரு நெடுஞ்சாலையில் உள்ள கெங்கேரியில் 75 ஏக்கர் பரப்பளவில் புதிய வளாகம் திறக்கப்பட்டது.
சான்றுகள்[தொகு]
- ↑ "CII speaker profile 2013" (PDF). website. 2012-10-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 24 மார்ச் 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-09-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-06-13 அன்று பார்க்கப்பட்டது.