காந்தியடிகள் நற்பணி கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காந்தியடிகள் நற்பணி கழகம் கும்பகோணத்தில் உள்ளது. இதன் நிறுவனர் கு. பாலசுப்ரமணியம் ஆவார். இக்கழகம் 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இக்கழகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து ஏழை மாணவர்களுக்கு இலவசமாக படிக்க உதவி செய்து வருகிறது. படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், படிக்க வசதியற்றவர்கள் போன்றவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படுகிறது. எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு ஆகியவை இங்கு நடத்தப்படுகிறது. இங்கு படிக்கும் மாணவர்களிடம் கட்டணம் எதுவும் வாங்குவதில்லை.

வெளி இணைப்புகள்[தொகு]