காட்டுப்புத்தூர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
தோற்றம்
| மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் | |
|---|---|
| பெயர் | |
| வேறு பெயர்(கள்): | |
| அமைவிடம் | |
| நாடு: | |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | திருச்சிராப்பள்ளி |
| அமைவிடம்: | காட்டுப்புத்தூர் |
| கோயில் தகவல் | |
| மூலவர்: | சுந்தரேசுவரர் |
| தாயார்: | மீனாட்சி அம்மன் |
| குளம்: | |
| சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
| கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
| கல்வெட்டுகள்: | |
காட்டுப்புத்தூர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டம் காட்டுப்புத்தூரில் அமைந்துள்ள ஒரு சிவாலயமாகும்.[1] இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் என்றும், அம்பாள் மீனாட்சி என்றும் அழைக்கப்படுகிறார்.
இச்சிவாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவர் சுந்தரேசுவரர் கிழக்கு நோக்கியுள்ளார். அம்பிகை மீனாட்சி தெற்கு நோக்கி உள்ளார்.
கோஷ்டத்தில் தட்சணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்கை சிலைகள் அமைந்துள்ளன. இக்கோயிலின் தென் மேற்கில் விநாயகர் சன்னதியும், வள்ளி தெய்வானை உடனுறை சண்முகர் சன்னதி வட மேற்கிலும் அமைந்துள்ளது. இக்கோயிலின் பிரகாரத்தில் நவகிரகங்கள் மற்றும் பைரவர் சன்னதிகள் உள்ளன.
விழாக்கள்
[தொகு]- பிரதோசம்
- திருவாதிரை