கல்லாடம் நூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்லாடம் நூறு என்னும் நூலில் 100 பாடல்கள் உள்ளன. இதனைப் பாடியவர் கல்லாடர் என்னும் பெயர்கொண்ட ஒரு புலவர். இதில் உள்ளவை அகத்துறைப் பாடல்கள். பாடல் அமைதியை நோக்க இது 15 ஆம் நூற்றாண்டு நூல் எனத் தெரியவருகிறது.

இந்த நூலில் உள்ள ஒரு பாடல்

கல்லாடர் செய் பனுவல் கல்லாடம் நூறும் நூல்
வல்லார்கள் சங்கத்தில் வந்தருளிச் - சொல் ஆயும்
மா மதுரை ஈசர் மனம் உவந்து கேட்டு முடி
தாம் அசைத்தார் நூறு தரம். (இந்த நூலிலுள்ள பாயிரப் பாடல்)

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லாடம்_நூறு&oldid=1400167" இலிருந்து மீள்விக்கப்பட்டது