கல்லடிகோடன் மலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்லடிகோடன் மலைகள் என்பது கேரளாவில் உள்ள பால்காட் இடைவெளியை வடக்கே, தமிழக எல்லையை ஒட்டி அமைந்துள்ள மலைத்தொடர் ஆகும்.

பாலக்காட்டில் இருந்து கோழிக்கோடு வரையிலான சாலைப் பாதையில் ஒரு குறிப்பிடத்தக்க அடையாளமாக இருப்பதுடன், ஏராளமான மரங்களின் அடர்த்தி குறைந்த, செடிகளால் சூழப்பட்ட காடுகளின் ஆதாரமாக உள்ளன. இந்த மலைகள் ஷிலாஜித் ( கன்மடம் "கல்-கஸ்தூரி என்று உள்ளூர் மொழியில் அழைக்கப்படுகிறது), அத்துடன் ஏராளமான மருத்துவ குணங்களுள்ள செடிகள் இருப்பதோடுn மேற்குத் தொடர்ச்சி மலையின் மற்ற பகுதிகளுக்கு ஏற்ப, இந்த மலைகள் அதிக அளவில் பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்டுள்ளன.

கல்லடிகோடன் மலைகள் அதன் இயற்கை அழகுக்காக நன்கு அறியப்பட்டவை, இந்த மலைகளில் பல்வேறு நீர்வீழ்ச்சிகள், அருவிகள் காணப்படுகின்றன. மேலும் அதன் நீர்வீழ்ச்சிகள் பல ஆறுகளுக்கு நீர் ஆதாரமாக உள்ளன. [1] அவற்றில் இரண்டு முக்கிய நீர்வீழ்ச்சிகள் முத்திகுளம் அருவி மற்றும் மீன்வல்லம் அருவி ஆகும். [2]

ஒரு சமூகவியல் கண்ணோட்டத்தில், இந்த மலைகள் பல உள்ளூர் தெய்வங்களைப் பற்றி  ஆதிக்கம் செலுத்தும் நாட்டுப்புறக் கதைகளின் பலதரப்பட்ட கூறுகளின் தாயகமாகும். இவர்களில், கல்லடிகோடன் காரி நீலி ("அடர் நீலம்" தெய்வம்) தந்திரத்தின் சக்தி பள்ளியில் ஒரு குறிப்பிடத்தக்க மோகினியாகும் மற்றும் பல சாத்தன்களின் தாய் (சிறு தெய்வங்கள் - பெரும்பாலும் இவை குறும்புக்காரர்களாக சித்தரிக்கப்படுகின்றன, போதுமான பயிற்சி பெற்ற மனிதர்களால் இவைகள் கட்டுப்படுத்தப்படலாம். அத்தகைய மனிதர்களை   எஜமானர்கள் அல்லது ஷாமன்கள் என அழைப்பார்கள்) என கருதப்படுகிறது . கல்லடிகோடன் மலைகள் இப்படிப்பட்ட ஏராளமான ஷாமன்களையும் (சூனியக்காரர்கள்) மற்றும் நீலியாட்டம் என்று அழைக்கப்படும் ஒரு நாட்டுப்புற நடனத்தின் ஊற்றாகவும் உள்ளது.[1] இந்த உக்கிரமான மோகினி தேவியின் கதையும் நீலியாட்டத்தின் ஒரு அங்கமாகும் [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Kalladikodan Hills –Where beauty meets myth". OnManorama.
  2. "Meenvallam Waterfalls in Palakkad". Kerala Tourism.
  3. "About those dark days". The New Indian Express.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லடிகோடன்_மலைகள்&oldid=3739153" இலிருந்து மீள்விக்கப்பட்டது