கயத்தார் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுமை நகர் கயத்தார் புனித ஆரோக்கிய அன்னையின்​ திருத்தல வரலாறு :

தென் தமிழ்நாட்டின் வரலாற்றில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த புகழ்மிக்க கத்தோலிக்க திருச்சபைகளில் ஒன்றான கயத்தாறு புதுமை புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் 113 ஆண்டுகளை தழுவி நிற்கிறது.

1898 ம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது.

ஆலயத்தின் அருகில் மாதாவின் புதுமை கிணறு உள்ளது. ஆரம்பத்தில் சிறிய கோவிலாக இருந்தது.

பின்னர் நெருக்கடி காரணமாக 1998 ஆம் ஆண்டு ஊர்மக்கள் உதவியோடு அப்போதைய பங்குத்தந்தை ம. சார்லஸ் அடிகளாரின் முழு முயற்சியோடும் 2000 ஆம் ஆண்டு புதிய கோபுர கோவிலாக எழுப்பட்டது.

ஆலயம் 110 அடி நீளம் 41 அடி அகலம் 90 அடி உயரத்திலும் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

கோபுரத்தின் அருகில் கடலில் கப்பல் மிதந்து வருவது போல் மாதா வந்து புயலை அடக்கியவாறு காட்சியாளிப்பது போல் ஆலயம் கட்டப்பட்டு 2001 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி திறக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 13 தேதி ​ ஆலய திறப்பு விழா அன்று அன்னதானம் வழங்கி கொண்டாடப்படுகிறது.

அன்னையின் பிறந்தநாள் பெருவிழா ஒவ்வொறும் ஆண்டும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8 தேதி வரை 10 நாட்கள் வெகு விமரிசையாக திருவிழா நடைபெறும்.

செப்டம்பர் 7 தேதி 9 ஆம் திருநாள் மாலை சிறப்புதிருப்பலியும் வாணவேடிக்கையுடன் கூடிய அதிதூதர்மிக்கேலல்யார், புனித செபஸ்தியார், புனித அந்தோணியார், புனித சவேரியாரின் சொருபங்கள் தாங்கிய சிறப்பாக நடைபெறும்.

செப்டம்பர் 8 தேதி பத்தாம் திருவிழா அதிகாலை ஆயர்களின் ஆடம்பர கூட்டு திருப்பலியுடன் 35 அடி உயரமுள்ள வெள்ளிதேரில் ஆரோக்கிய தாய் அமர்ந்து புதுமை நகரின் வீதிகளில் வலம் வந்து மக்களுக்கு எண்ணற்ற வரங்களை அள்ளித்தருகிறாள்.

மாலை தேர்நிலையை வந்தடைந்ததும் கொடியிறக்கப்பட்டு திருவிழா இனிதே நிறைவடைகிறது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து கயத்தாறுக்கு பேருந்து வசதிகள் உள்ளது.

திருநெல்வேலி செல்லும் வழியில் கோவில்​ப்பட்டிக்கு அடுத்து அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]