ஏகாம்பரநாதர் உலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏகாம்பரநாதர் உலா இரட்டைப்புலவர் பாடிய நூல்களில் ஒன்று. இந்த நூலில் காடவர் தலைவன் சம்புவராயன் மல்லிநாதன் பற்றிய செய்தி வருகிறது. இதனால் இதன் காலம் 14-ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளப்படுகிறது.

156 கண்ணிகள் இந்த நூலில் உள்ளன.

இந்த நூலில் சொல்லப்படும் கதை:

கயிலாயத்தில் உமை சிவனது கண்ணைப் புதைத்தார். அதனால் உலகம் இருண்டது. சிவன் உமையைச் சபித்தார். சாபத்தின்படி உமை காஞ்சியில் பிறந்து சிவனைப் பூசித்தார். சிவன் வந்தார். கம்பை ஆற்றில் வெள்ளம் வந்தது. அம்மை பயந்து சிவனைத் தழுவினாள். ஏழு பருவப் பெண்கள்

ஏழாம் பருவத்துப் பேரிளம்பெண் பற்றிக் கூறும்போது சிவபுரத்தின் காட்சி விளக்கப்பட்டுள்ளது.

கருவிநூல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏகாம்பரநாதர்_உலா&oldid=3278587" இலிருந்து மீள்விக்கப்பட்டது