எஸ். ஏ. எம். அண்ணாமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். ஏ. எம். அண்ணாமலை (S. A. M. Annamalai) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் திருக்கோயிலூர் வட்டம் சிறுமதுரைக் கிராமத்தினைச் சார்ந்தவர் ஆவார். திருவண்ணாமலை மற்றும் சென்னையில் கல்வி பயின்றவர். அண்ணாமலை திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதி பொது வேட்பாளராகத் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 1957ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர் ஆவார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. (in English) Madras Legislature WHO IS WHO 1957. Chennai: Legislature Department Madras. 27.06.1957 [1957]. பக். 83. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஏ._எம்._அண்ணாமலை&oldid=3439542" இலிருந்து மீள்விக்கப்பட்டது