உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள் (World Autism Awareness Day); ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. மதியிறுக்கம் என்பது, பல்வேறு வகையான மூளை வளர்ச்சிக் குறைபாடுகளைக் கொண்ட நோயாகும். இதனை முற்றிலும் குணப்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மதியிறுக்கம் என்னும் மூளை வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் கையாள வேண்டும், எந்த முறையில் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.[1]

கருப்பொருள்கள்[தொகு]

  • 2018: "மதியிறக்கத்துடனான பெண்கள், பெண் குழந்தைகளை மேம்படுத்தல்"[2]
  • 2017: "சுய அதிகாரம் மற்றும் சுய தீர்மானம் நோக்கி" [1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "World Autism Awareness Day 2 April". un.org (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-04-03.
  2. 2018 World Autism Awareness Day observance