ஈரூடகப்படை
Jump to navigation
Jump to search
கடலிலும் தரையிலும் தாக்குதல் வலுக்கொண்ட படையணியை ஈரூடகப் படையணி எனலாம். பொதுவாக வேக கடல்வழித் தரையிறக்கத்துக்குப் பிறகு தரையில் தாக்குதல் நடத்தும் படையணியை ஈருடகப் படையணி குறிக்கும்.
விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி[தொகு]
கடலிலும் தரையிலும் தாக்குதல் வலுக்கொண்ட கடற்புலிகளோடு இணைந்து செயலாற்றும் அல்லது கடற்புலிகளின் ஒரு அங்கமாக இருக்கும் ஈரூடகப் படையணி ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் 2006 ஆம் ஆண்டு கட்டமைத்துள்ளார்கள். இவர்களின் முதல் தாக்குதல் மண்டைதீவு படைத் தளத்தின் மீதும், இரண்டாவது தாக்குதல் நெடுந்தீவு கடற்படைத் தளத்தின் மீதும் நடத்தப்பட்டது.இந்த ஈரூடகப் படையின் பெயர் சேரன் ஈரூடகப் படையணி என்பதாகும்.[1]