இராமதேவர் பூசாவிதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராமதேவர் பூசாவிதி என்பது இராமதேவர் என்வரால் எழுதப்பட்ட நூல்களில் ஒன்று.
இவர் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்.

இவர் சிறியனவும் பெரியனவுமாக 27-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்.

  • இராமதேவர் அட்டாங்க பட்சினி
  • இராமதேவர் கருக்கடைச் சுருக்கம்
  • இராமதேவர் கருமான சூத்திரம்
  • இராமதேவர் கேசரி சூத்திரம்
  • இராமதேவர் சோசிடம்
  • இராமதேவர் தாண்டகம்
  • இராமதேவர் நிகண்டு
  • இராமதேவர் பரஞான கேசரு வினோதம்
  • இராமதேவர் பாஷை
  • இராமதேவர் பூசாவிதி

போன்றவை இவரது நூல்கள்.

இவர் சித்தராக விளங்கியவர்.
இந்த நூலில் 10 விருத்தங்கள் உள்ளன.

நூல் தரும் கருத்துகளில் சில[தொகு]

  • ஆதி
ஆதி என்ற மணிவிளக்கை அறிய வேணும்
அகண்ட பரிபூரணத்தைக் காண வேணும்
சோதி என்ற தூயவெளி மார்க்கம் [1]
  • வேதாந்தம்
வேதி என்ற வேயாந்த மார்க்கம் [2]
  • உருவாரம்
முக்கோணம் வரைந்து அதன் முனைகளைச் சேர்த்து நாற்கோணம் வரைந்து நடுவில் நாயகியை வைத்து ஏழு முனைகளிலும் தீப்பிழம்பு வைத்து மனக் கண்ணில் பார்ப்பவன் சித்தன். [3]
  • பூசை விழிகள்
பலி கொடுத்தல், சுடுகாட்டுச் சாம்பல் பூசல், ஆணி அடித்தல் முதலான செயல்கள் இதில் விளக்கப்பட்டுள்ளன.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005
  • சித்தர் பாடல்கள், இரண்டாம் பாகம், பிரேமா பிரசுரம், ஆறாம் பதிப்பு 1987

அடிக்குறிப்பு[தொகு]

  1. பாடல் 1
  2. பாடல் 1
  3. பாடல் 3
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமதேவர்_பூசாவிதி&oldid=2090492" இலிருந்து மீள்விக்கப்பட்டது