அரித்ரா நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரித்ரா நதி (Haridra Nadhi) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தெப்பக்குளம் ஆகும். இது மன்னார்குடி சேது பாவா சுவாமி அறக்கட்டளை யுடன் இணைந்தது. இந்தத் தெப்பக்குளம் 1158 அடி நீளமும் 847 அடி அகலமும் கொண்டது. இதன் பரப்பளவு 23 ஏக்கர் ஆகும்.[1] இது இந்தியாவில் உள்ள கோயில் தெப்பத்தில் பெரிய தெப்பமாகக் கருதப்படுகிறது. நதியே தெப்பமாக மாறியதாய் கருதுவதால் அரித்ரா நதி எனப் பெயரிட்டுள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரித்ரா_நதி&oldid=3846497" இலிருந்து மீள்விக்கப்பட்டது