அரசு மேல்நிலைப் பள்ளி, மாதவலாயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாதவலாயம் அரசு மேல்நிலைப்பள்ளி கன்னியாகுமரி மாவட்டம்
பள்ளி மாணவர்களின் செயல்பாடுகள்
இப்பள்ளியின் தகவல் தொழில் நுட்ப மன்றம்

மாதவலாயம் அரசு மேல்நிலைப்பள்ளி, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டாரத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியாகும்.[1] [2]இப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக 1978-ம் ஆண்டு துவங்கப்பட்டு, 1998–ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 2005–ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 2017 ஆம் கல்வி ஆண்டின் படி 300 மாணவ மாணவிகளும் 15 ஆசிரியர்களும் உள்ளனர்.

முன்னாள் மாணவர் சங்கம்[தொகு]

இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து பள்ளியின் வளர்ச்சிக்காக முன்னாள் மாணவர் சங்கத்தினை நடத்தி வருகின்றனர்.

பள்ளியில் இயங்கி வரும் அமைப்புகள்[தொகு]

  1. நாட்டு நலப்பணித் திட்டம்
  2. சாரண சாரணியர் இயக்கம்
  3. சுற்றுச்சூழல் மன்றம்
  4. பசுமைப்படை
  5. செஞ்சிலுவைச் சங்கம்

நாட்டு நலப்பணித்திட்டம்[தொகு]

நாட்டுநலப்பணித்திட்டம் 2015-ம் ஆண்டு இப்பள்ளியில் துவங்கப்பட்டது. இப்பள்ளியில் 11-ம் வகுப்பில் 25 மாணவ மாணவிகளும் 12-ம் வகுப்பில் 25 மாணவ மாணவிகளும் இத்திட்டத்தில் இணைந்து செயலாற்றி வருகின்றனர்.

தகவல் தொழில் நுட்ப மன்றம்[தொகு]

இப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு புதிய தகவல் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள தகவல் தொழில்நுட்ப மன்றம் வாரந்தோறும் செயல்பட்டு வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/sep/03/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2993011.html. பார்த்த நாள்: 29 December 2023. 
  2. தினத்தந்தி (2022-08-01), "செய்குதம்பி பாவலர் பிறந்த நாள் விழா உருவ படத்துக்கு மாலை அணிவித்து கலெக்டர் மரியாதை", www.dailythanthi.com, பார்க்கப்பட்ட நாள் 2023-12-29

புற இணைப்புகள்[தொகு]

புகைப்படத் தொகுப்பு