அமரா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமரா
இயக்கம்சீவன்
இசைஇமான்
நடிப்புஅமரன்
சோனு
ஆஷிஷ் வித்யார்த்தி
ஒளிப்பதிவுசீவன்
வெளியீடு2014 பிப்ரவரி
மொழிதமிழ்

அமரா 2014 பிப்ரவரியில் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதில் அமரன் சோனு போன்றோர் நடித்துள்ளனர். இப்படத்தை சீவன் இயக்கியுள்ளார்[1].

கதைச்சுருக்கம்[தொகு]

கிராமத்தில் எந்த வேலைக்கும் போகாமல் நண்பர்களோடு ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறார் அமரன். இப்படி பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுவதை தாயார் கண்டித்தும் அதை பொருட்படுத்துவதில்லை. இந்நிலையில் தன் நண்பர் ஒருவரின் திருமண நிச்சயதார்த்தத்திற்காக ஊருக்கு செல்ல உற்சாகத்துடன் தயாராகிறார் அமரன். ஆனால், அவரது நண்பரோ, வேலைக்குப் போகாமல் ஊர் சுற்றிவரும் உன்னை அழைத்துச் செல்லமாட்டேன் என்று கூறி அவரை விட்டுச் செல்கிறார்.

இதனால் மனமுடைந்து போன அமரன், வேலைக்குச் செல்ல முடிவெடுத்து மதுரையில் காய்கறி கடை நடத்திவரும் தன் அத்தையிடம் வேலைக்குச் செல்கிறார். ஒருநாள் இவர் மார்க்கெட்டில் காய்கறிகளை விற்றுக் கொண்டிருக்கும்போது ஒருவர் பொருட்களை வாங்கிக் கொண்டு பணம் தராமல் செல்கிறார். பணத்தை தராமல் சென்றது காவல்காரர் என்று தெரியாமல் அவரிடம் சண்டை போடுகிறார். அதை தடுக்க வந்த காவல்துறை அதிகாரியான சம்பத்தையும் அடித்து விடுகிறார் அமரன்.

காவலருடன் சண்டை போட்டதால் அமரனின் அத்தை, அவரை ரெயிலில் சென்னைக்கு அனுப்பி விடுகிறார். ரெயிலில் அமரனை சந்திகும் சோனு, அவருடனே ஒட்டிக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் ரெயிலை தவற விடுகின்றனர். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த இவர்களை ஒருவர் புகைப்படம் எடுத்து பத்திரிக்கை ஒன்றில் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடிச்சென்றதாக செய்தி வருகிறது. இதை அறியும் சோனுவின் தந்தையான ஆஷிஷ் வித்யார்த்தி, இவர்களை கொல்ல திட்டம் தீட்டுகிறார்.

மறுநாள் விடிந்த பிறகு சோனு, அமரனிடம் நீ யார்? என்னை எதற்கு கடத்தினாய்? என்று சத்தம் போடுகிறார். அமரன் நடந்ததையெல்லாம் சோனுவிடம் விவரிக்கிறார். இதற்கு சோனு, நான் ஏற்கனவே ஒருவரை காதலிக்கிறேன். இதற்கு சம்மதித்த என் தந்தையை சந்திக்க காதலனை அழைத்துக்கொண்டு நான் ஊருக்கு ரெயிலில் சென்று கொண்டிருந்தேன். அப்போது யாரோ என்னிடம் மயக்க ஈரட்டையை கொடுத்து விட்டார்கள் என்றும் தனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் கூறுகிறார். என் காதலனையும் காணவில்லை என்று கூறி புலம்புவதோடு காதலனை கண்டுபிடிக்க தனக்கு உதவுமாறு அமரனை கேட்கிறாள்.

அமரனும், சோனுவும் காதலனை தேடி அவரது வீட்டுக்குச் செல்கிறார்கள். அங்கு தன் அப்பா ஆஷிஷ் வித்யார்த்தி காதலனை கொன்றுவிட்டதாகவும், தன்னையும் கொல்ல தேடி வருகிறார் என்பதையும் அறிகிறார் சோனு.

இறுதியில் அமரனும், சோனுவும் ஆஷிஷ் வித்யார்த்தியிடம் மாட்டிக் கொண்டார்களா? அல்லது காவல்துறை அதிகாரியான சம்பத்திடம் சிக்கினார்களா? காதலிக்காத இவர்கள் இரண்டுபேரும் காதலித்தார்களா? என்பதை விறுவிறுப்பாக இயக்குநர் சொல்லியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://cinema.maalaimalar.com/2014/02/28151727/Amara-cinema-review.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமரா_(திரைப்படம்)&oldid=3709214" இலிருந்து மீள்விக்கப்பட்டது