அன்னை சர்தால் தேவி ஆலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்னை சர்தால் தேவி மந்திர் (Mata Sarthal Devi Mandir) என்பது இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீரில் (ஒன்றியப் பகுதி) கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள சர்தாலில் உள்ள ஒரு முக்கியமான இந்து ஆலயமாகும். சர்தால் யாத்ரா என்று அழைக்கப்படும் இந்த ஆலயம் ஆண்டு தோறும் மேற்கொள்ளப்படும் புனித யாத்திரைக்கு புகழ்பெற்றது.

கண்ணோட்டம்[தொகு]

ஒரு இந்து மத ஆலயமான தேவி சர்தால் மாதா ஆலயம் சர்தால் யாத்திரை என்று அழைக்கப்படும் வருடாந்திர யாத்திரையின் காரணமாகவும் புகழ் பெற்ற ஆலயமாகும். துர்கா தேவியின் மறு அவதாரமாகக் கருதப்படும் இந்த தேவியின் சிலை, முதலில் கிஷ்துவாரின் அரசர் அகர் தேவ் காலத்தில் உள்ளூர் மக்களால் கற்களால் செதுக்கப்பட்டது. பின்னர் 1936 ஆம் ஆண்டில் மகாராஜா ஹரி சிங்கால் புதுப்பிக்கப்பட்டது. இது தோராயமாக கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பெரும்பாலும் குளிர்காலத்தில் பனியால் மூடப்பட்டிருக்கும்.[1]

வரலாறு[தொகு]

உள்ளூர் புராணத்தின் படி, கிஷ்துவார் பகுதியைச் சேர்ந்த முதல் துறவியான ஸ்ரீ பால், தனது சீடர்களுக்கு 18 கரங்களுடன் அன்னையின் வடிவில் துர்கா தேவியை வழிபடுமாறு அறிவுறுத்தினார். பதினெட்டு ஆயுதம் தாங்கிய தேவி சிலையை ஒரு இளம் பெண்ணின் வடிவத்தில் உள்ளூர்வாசிகளில் ஒருவரால் சக்தியை அழைக்க முடிந்தது என்று புராணம் கூறுகிறது. கிஷ்துவாரின் அரசர் அகர் தேவ், அந்தச் சிலைக்கு உரிய இடத்தில் ஒரு கோவிலை உருவாக்க தனது அரசவை ஊழியர்களை அனுப்பியதாக நம்பப்படுகிறது. கற்கோயில் கட்டப்பட்ட சர்தால் என்ற இடத்தில் தற்போது உள்ள வாழிடத்திற்கு அப்பால் எடுத்துச் செல்ல முடியாத அளவுக்கு சிலை மிகவும் கனமாக மாறியதாக கூறப்படுகிறது.[2]

நிர்வாகம்[தொகு]

கோவிலின் மேலாண்மையானது, கோவிலின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ளும் தர்மார்த் அறக்கட்டளையிடம் உள்ளது. கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு சத்திரம் (தர்மசாலா) கட்டப்பட்டுள்ளது. அங்கு யாத்ரீகர்கள் குறைந்த அளவு கட்டணத்தில் இரவு தங்கலாம்.

வருடாந்திர யாத்திரை[தொகு]

இக்கோயிலுக்கு வருடாந்திர யாத்திரை (ஜூலை மாதத்தில்) உள்ளூர் நாட்காட்டியில் ஒரு முக்கிய நிகழ்வாகும், அப்போது அருகிலுள்ள கிராமங்களில் இருந்து மக்கள் தேவியின் ஆசீர்வாதத்தைப் பெற கோவிலுக்கு திரள்வார்கள். மக்கள் கோயிலுக்கு திரிசூலங்களைக் (திரிசூலம்) கொண்டு வருகிறார்கள். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான திரிசூலங்களின் சேகரிப்பு இந்த ஆலயத்தில் உள்ளது. டோக்ரா ஆட்சியின் போது, இந்த யாத்திரை "சர்காரி யாத்ரா" என்று அழைக்கப்பட்டது. இந்த யாத்திரையை கொண்டாடுவதற்காக தோடா மாவட்டம் முழுவதும் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. கோயிலில் மொட்டை (குழந்தையின் முதல் முடி அகற்றுதல்) அடிப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது ஹஸ்தியிலிருந்து (கிஷ்துவாருக்கு அருகில்) தொடங்கும் தனிப்பட்ட வாகனச் சாலையைக் கொண்டுள்ளது, இது கோயிலின் அடிவாரத்திற்குச் செல்கிறது. மலையின் உச்சியில் அமைந்துள்ள இக்கோயில், உச்சியை அடைய சில கடினமான படிக்கட்டுகள் உள்ளன.

சர்த்தால் மாதா சிலை திருட்டு[தொகு]

மாதா சர்தால் தேவியின் பழமையான பதிணென் கரங்கள் கொண்ட மாதா (18 கைகள் கொண்ட தாய்) கருங்கல்லாலான சிலை 2008 ஆம் ஆண்டு கோயிலில் இருந்து திருடப்பட்டது. ஆனால், அந்தச் சிலையை அப்பகுதியில் இருந்து கடத்த முடியாததால், அது மீட்கப்பட்டு கோயிலில் மீண்டும் நிறுவப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. [3] [4] [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sarthal Devi Yatra – 2021". www.kishtwar.nic.in. 18 July 2021. பார்க்கப்பட்ட நாள் 5 August 2021.
  2. Khajuria, G L. "State Times". http://news.statetimes.in/sacred-shrine-of-sarthal-devi/. 
  3. "Kishtwar Hindus to boycott polls over theft of ancient idols | Latest News & Updates at Daily News & Analysis". Dnaindia.com. 2009-04-20. பார்க்கப்பட்ட நாள் 2016-03-30.
  4. "SARTHAL MATA MANDIR, National Highway 1B, Kishtwar, Jammu and Kashmir 182204, India «". Hindutempleguide.org. 2014-01-27. Archived from the original on 2016-04-10. பார்க்கப்பட்ட நாள் 2016-03-30.
  5. "Tourism". Kishtwar.nic.in. 2001-01-01. பார்க்கப்பட்ட நாள் 2016-03-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னை_சர்தால்_தேவி_ஆலயம்&oldid=3828200" இலிருந்து மீள்விக்கப்பட்டது