ஏலாதி பழைய உரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர். அவற்றில் பழமையான உரைகள் 1200 – 1500 ஆம் ஆண்டுக்கால இடைவெளியில் தோன்றியவை.[1]

ஏலாதி நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. உரை ஆசிரியர் பெயர் தெரியவில்லை.[2]

ஏலாதி நூல் பாடல் ஒவ்வொன்றிலும் ஆறு கருத்துகள் இருக்கும். இந்த ஆறு கருத்துகளையும் பிரித்துக் காட்டும் வகையில் இதன் உரை அமைந்துள்ளது.

இந்த உரைநூலின் காலம் 13ஆம் நூற்றாண்டு. [3]

அடிக்குறிப்பு[தொகு]

  1. டாக்டர். மு. வரதராசனார், தமிழ் இலக்கிய வரலாறு.
  2. 1939 சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு
  3. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏலாதி_பழைய_உரை&oldid=2641890" இலிருந்து மீள்விக்கப்பட்டது