ஆரிய அரசன் பிரகத்தன்
ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்காகப் புலவர் கபிலர் குறிஞ்சிப் பாட்டு என்னும் நூலைப் பாடினார்.
இந்தப் பிரகத்தன் தமிழர் வாழ்வில் நிகழும் களவு ஒழுக்கம் பற்றித் தவறான எண்ணம் கொண்டிருந்தான்.
தமிழரின் களவு ஒழுக்கம் எப்போதும் திருட்டுத்தனமாகவே வாழும் வாழ்க்கை அன்று.
அது திருமணம் செய்துகொள்ளும் கற்பு ஒழுக்கத்தில் முடியும் என்னும் அறநெறியை விளக்குவது குறிஞ்சிப்பாட்டு.
இது பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று.