இளம்பிறை (இதழ்)
இளம்பிறை (ⓘ) இலங்கை, கொழும்பிலிருந்து 1960-70களில் மாதந்தோறும் வெளிவந்த ஒரு இதழாகும். இவ்விதழ் இலங்கை இசுலாமிய தமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு குறிப்பிடத்தக்க இடத்தினை வகித்துள்ளது. இலங்கையில் பல இசுலாமிய எழுத்தாளர்களை உருவாக்குவதில் இது கூடிய பங்களிப்பினை வழங்கியுள்ளது.
ஆசிரியர்[தொகு]
- ரஹ்மான்.
பணிக்கூற்று[தொகு]
'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியர் ஆகப் பெறின்' என்ற திருக்குறளை முழக்கமாகக் கொண்டு வெளிவந்தது. இதன் 1969ஆம் ஆண்டு மீலாத் மலரில் ஈழத்து இஸ்லாமிய இதழ்களைப் பற்றிய கட்டுரை ஒன்று வெளிவந்தது.
உள்ளடக்கம்[தொகு]
கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டரைகள், நூலாய்வுகள், கேள்வி பதில், வாசகர் கருத்து போன்ற பல்சுவை அம்சங்களை இது தன்னகத்தே கொண்டிருந்தது.
ஆதாரம்[தொகு]
- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்