பயனர் பேச்சு:Yercaud-elango/மணல்தொட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெருந்துளசி, திருநெல்வேலி

பெருந்துளசி

இது ஒரு மூலிகைத் தாவரம்.இதன் தாவரவியல் பெயர் ஓசிமம் கிராட்டிசிமம் (Ocimum gratissimum)என்பதாகும்.இது லேமியேசி (Lemiaceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.ஆப்பிரிக்கா,மடகாஸ்கர்,தெற்கு ஆசியா,இந்தியா,இலங்கை,தாய்லாந்து,மலேசியா,வெப்பமண்டல அமெரிக்கா மற்றும் லட்சத்தீவு போன்ற பகுதிகளில் வளர்கின்றன.இதற்கு காட்டு துளசி ,ஆப்பிரிக்க துளசி,கிராம்பு துளசி போன்ற பெயர்களும் உண்டு.

இது ஒரு மீட்டர் உயரம் வரை வளரும்.இதன் இலையில் எலுமிச்சம் பழச் சுவையும் ,நறுமணமும் கொண்டிருக்கும்.ஆகவே இதை எலுமிச்சை துளசி என்றும் அழைக்கின்றனர்.இதில் வெள்ளை நிற பூக்கள் மலர்கின்றன.

பயன்

இச்செடியில் இருந்து ஆவியாகும் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.மேற்கு ஆப்பிரிக்காவில் பொதுவான சமையல் மூலிகையாகும்.இச்செடிக்கு வாந்தியை நிறுத்தும் குணம் உண்டு.கொசுக்களை விரட்டும் தன்மையும் இதற்கு உள்ளது.

மேற்கோள்கள்

1.அறிவியல் களஞ்சியம் (2005) தொகுதி பதினாறு.