பாலாசோன் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலாசோன் (Balason) என்பது இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள டார்கிலிங் மாவட்டத்தில் இருக்கும் சிலிகுரி நகரத்திற்கு வடமேற்கே 18 கி.மீ. தொலைவில் உள்ள துதியா கிராமத்தில் ஓடும் ஒரு நதியாகும். செஞ்சால் மலையிலிருந்து உற்பத்தியாகி வடக்கு வங்காளத்தின் சமவெளிகளுக்கு தெற்கே பாய்ந்து அங்கே மகானந்தா ஆற்றில் கலக்கிறது [1].

பாலாசோன் ஆற்றில் கிடைக்கும் சல்லிகற்கள் மற்றும் மணல் போன்றவை வீடுகள் கட்டுவதற்கு பயன்படும் சிறந்த தரமான கட்டுமானப் பொருட்களாகக் கருதப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Prithvish Nag; Virendra Kumar Kumar; Jagadish Singh (1997). Geography and Environment: Regional lissues. Concept Publishing Company. p. 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7022-607-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலாசோன்_ஆறு&oldid=2400771" இலிருந்து மீள்விக்கப்பட்டது