குரங்கு நாத கோயில்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குரங்கு நாத கோயில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தொட்டியம் ஒன்றியத்தில் சீனிவாசநல்லூரில் அமைந்துள்ளது. இது திருச்சிராப்பள்ளியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் சீனிவாசநல்லூர் உள்ளது. இவ்வூரின் மையப்பகுதியில் உள்ளது. சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட இக்கோயில் இந்து கடவுள் கோயிலாகும்.
இக்கோயில் 9ம் நூற்றாண்டில் முதல் பராந்தகச் சோழனால் கட்டப்பட்டது. இக்கோயிலின் வெளிப்புற சுவரில் சோழர் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றது. சுற்றுச் சுவற்றில் தட்சணாமூர்த்தி சிலை, விஷ்ணு சிலைகளும் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோயில் தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்படுகிறது.