பயனர்:TNSE CHITRA TRY/மணல்தொட்டி
பாரதியும் கவிதாதேவியும்[தொகு]
பாரதி கவிதா தேவியுடன் கலந்து பல பாடல்களை நமக்கு தந்துள்ளார்.ஆனால் கவிதாதேவியைப்பிரிந்து வாழும் நிலையும் பாரதிக்கு உண்டானது. கவிதாதேவி தன்னைவிட்டுப்பிரிந்த காலத்தை பன்னாள் பன்மதி ஆண்டு பல கழிந்தன நின்னருள் வதனம் நான் நேருறக்கண்டே என்று எழுதுகிறார்.
கவிதைக்காதலி தனிப்பாடல்[தொகு]
பாரதி தனது கவிதா தேவி இல்லாத வாழ்வை தான் ஒரு பன்றிவாழ்க்கை வாழவேண்டிய கட்டாய நிலைமை என்றும் தன்னை அவர் அருந்தவப்பன்றி என்றும் குறிப்பிடுகிறார்.
அருந்தவப்பன்றி[தொகு]
பாரதி தான் எழுதிய நூலில் கவிதைக்காதலி எனும் பாடலில் சாபமான முனிவர் சாப விமோசனம் மூலம் பன்றியாக இருந்து மனிதனாக மாறிய கதை கூறி தன்னை அதுபோல அருந்தவப்பன்றி என்றும் சொல்லிக்கொள்கிறார்.
பன்றி கதை[தொகு]
முனிவர் சாபத்தால் பன்றியாக மாறி பின் மகன் தன்னை கண்டுபிடித்து வெட்டும் நாளில் மனிதனாக மாறும் கதையை பாரதியே கூறியுளார். கவிதாதேவி விலகி இருந்த காலத்தை ஐயகோ மறைந்தது தெய்வ மருந்துடைப் பொற்குடம் என்று தவிக்கிறார்.