வோல்ட்டயர்
| பிராங்கோயிஸ்-மாரீ அரூவே | |
|---|---|
24 வயதில் வால்டேர், நிக்கோலாஸ் டி லார்கிலியர் வரைந்தது. |
|
| பிறப்பு | {{{birthname}}} 21 நவம்பர் 1694 பாரிஸ், பிரான்ஸ் |
| இறப்பு | மே 30 1778 (அகவை 83) பாரிஸ், பிரான்ஸ் |
| புனைப்பெயர் | வால்டேர் |
| தொழில் | மெய்யியலாளர்கள் |
| நாடு | பிரெஞ்சு |
|
தாக்கங்கள்
|
|
|
பின்பற்றுவோர்
|
|
வால்டேர் (Voltaire) என்னும் புனைபெயர் மூலம் பெரும்பாலும் அறியப்படுகின்ற ஃபிரான்சுவா-மாரீ அரூவே (François-Marie Arouet, 21 நவம்பர் 1694 – 30 மே 1778) ஒரு பிரெஞ்சு அறிவொளி இயக்க எழுத்தாளரும், கட்டுரையாளரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் நையாண்டிக்கும்; மத சுதந்திரம், கட்டற்ற வணிகம், என்பவை உள்ளிட்ட குடிசார் உரிமைப் பாதுகாப்பாளராகவும் பெரிதும் அறியப்பட்டவர். இவர் சிறந்த எழுத்தாளர். இவரது ஆக்கங்கள், நாடகம், கவிதை, புதினம், கட்டுரை, வரலாற்று ஆக்கங்கள், அறிவியல் ஆக்கங்கள் என்பன உள்ளிட்ட பல விதமான இலக்கிய வடிவங்களிலும் காணப்படுகின்றன. இவர் 20,000க்கு மேற்பட்ட கடிதங்களும், 2000 க்கு மேற்பட்ட நூல்களும், துண்டு வெளியீடுகளும் எழுதியதாகச் சொல்லப்படுகிறது.
இறுக்கமான தணிக்கை விதிகளும், அவற்றை மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகளும் இருந்தபோதும் இவர் வெளிப்படையாகப் பேசும் சமூக சீர்திருத்த ஆதரவாளராக இருந்தார். இவர் தனது ஆக்கங்கள் மூலம் அக்காலத்துக் கத்தோலிக்கத் திருச்சபைக் கோட்பாடுகளையும், பிரெஞ்சு நிறுவனங்களையும் விமர்சனம் செய்து வந்தார்.
ஜான் லாக் (John Locke), தாமஸ் ஹாப்ஸ் (Thomas Hobbes) ஆகியோருடன் சேர்த்து வால்டேரின் ஆக்கங்களும், எண்ணங்களும்; அமெரிக்க, பிரஞ்சுப் புரட்சி தொடர்பான சிந்தனையாளர்கள் மீது தாக்கம் கொண்டிருந்தன.