வேளாளர் கடமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேளாண்மை செய்பவர் வேளாளர். வேளாளர் கடமை என்று யாப்பருங்கல விருத்தியுரை பாடல் ஒன்று கூறுகிறது. இந்தக் கடமைகளை வேளாளர் நிலம் என்றும் வேளாண்-துறை என்றும் அது சுட்டுகிகிறது. [1]

ஆணை வழி நிற்றல் மாண்வினை தொடங்கல்
கைக்கடன் ஆற்றல் கசிவு அகத்து உண்மை
ஓவா முயற்சி ஒக்கல் போற்றல்
மன்றிடை மகிழ்தல் ஒற்றுமை கோடல்
திருந்திய அறத்தில் தீராது ஒழுகல்
விருந்து புறந்தருத்தல் வேளாண் துறையே - என்பது பாடல்

  1. அரசன் ஆணையை நிலைநாட்டுதல்
  2. சிறந்த செயல்களைத் தொடங்கிச் செய்தல்
  3. பிறருக்குக் கை போலக் கடமை ஆற்றுதல்
  4. இரக்க குணத்தை நெஞ்சில் கொண்டிருத்ததல்
  5. இடையறாது முயலல்
  6. சார்ந்து வாழும் மக்களை (ஒக்கல்) போற்றுதல்
  7. மன்றத்தில் மகிழ்தல்
  8. பிறரோடு ஒற்றுமையாக வாழ்தல்
  9. திருந்திய அறநெறியைக் கடைப்பிடித்தல்
  10. விருந்தினரைப் பேணுதல்

என்னும் 10 துறைகள் வெளாண்-துறைகள் என்று அந்த உரைநூல் குறிப்பிடுகிறது.

மேற்கோள்[தொகு]

  1. அமிர்தசாகரர் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 277
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேளாளர்_கடமை&oldid=3455339" இலிருந்து மீள்விக்கப்பட்டது