வீரை (சங்ககாலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீரை என்னும் ஊரில் உப்புக் காய்ச்சும் தொழில் நடைபெற்றது. வேளிர்குடிப் போராளிகள் இவ்வூரில் வாழ்ந்துவந்தனர். [1]

இவ்வூர் அரசன் வெளியன் தித்தன். இவன் உப்பளங்களில் பணியாற்றுவோருக்கு இரவில் உதவும் வகையில் மாலை நேரத்தில் முரசை அகலாகக் கொண்டு விளக்கேற்றி வைத்தான். [2]

வீரை [3] என்னும் சொல்லுக்கு வாழை என்னும் பொருள் உண்டு. இதன்படி பார்த்தால் இவ்வூரில் வாழைமரங்கள் மிகுதியாக இருந்திருக்கலாம்.

வீரை வெளியனார்,
வீரை வெளியன் தித்தனார்
ஆகிய சங்ககாலப் புலவர்கள் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. அடுபோர் வேளிர் வீரை முன்துறை நெடுவெள் உப்பின் நிரம்பாக் குப்பை பெரும்பெயர்க்கு உருகியாங்கு - அகம் 206
  2. வீரை வேண்மான் வெளியன் தித்தன் முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கு - நற்றிணை 58
  3. வீரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரை_(சங்ககாலம்)&oldid=1926570" இலிருந்து மீள்விக்கப்பட்டது