விரார் மருத்துவமனை தீவிபத்து
விரார் மருத்துவமனை தீவிபத்து (Virar hospital fire) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள விரார் நகரத்தில் ஏற்பட்ட தீவிபத்தைக் குறிக்கிறது. 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதியன்று நிகழ்ந்த இத்தீவிபத்தில் 13 கோவிட்-19 நோயாளிகள் கொல்லப்பட்டனர்.[1][2][3][4]
பின்னணி[தொகு]
கோவிட்-19 பெருந் தொற்றுநோயால் இந்தியா அப்போது மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது.[1][2] நெரிசல் மற்றும் ஆக்சிசன் பற்றாக்குறை ஆகிய நெருக்கடிகள் அடிக்கடி ஏற்பட்ட பிரச்சனைகளில் அடங்கும்.[1][2] 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதியன்று மகாராட்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் 24 கோவிட் நோயாளிகள் ஆக்சிசன் விநியோகம் தடைபட்டதால் இறந்தனர்.[1][2] 2021 ஆம் ஆண்டில், இந்தியாவில் மும்பை மற்றும் பருச்சிலும் மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்பட்டது.
விபத்து[தொகு]
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதியன்று அதிகாலையில், இந்திய மாநிலமான மகாராட்டிராவில் மும்பைக்கு வடக்கே உள்ள விரார் நகரத்தில் உள்ள விசய் வல்லப் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது.[1][2][3] அந்த நேரத்தில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் 17 நோயாளிகள் இருந்தனர். அவர்களில் 13 பேர் கொல்லப்பட்டனர். [1][2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Covid-19: India hospital fire as virus cases hit record high". BBC. 23 April 2021. https://www.bbc.co.uk/news/world-asia-56855387. பார்த்த நாள்: 4 June 2023.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Fire kills at least 13 Covid patients in hospital in western India
- ↑ 3.0 3.1 3.2 13 COVID-19 patients die in Maharashtra hospital fire
- ↑ "Fire kills COVID patients in Virar; Nestle records highest sales in 10 yrs". Business Today (India). 23 April 2021. பார்க்கப்பட்ட நாள் 24 April 2021.