வலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/பெப்ரவரி
- பெப்ரவரி 3, 1894 - யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. (படம்: யாழ்ப்பாண மாவட்டம்)
- பெப்ரவரி 8, 1956 - இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் அறிவிக்கப்பட்டது.
- பெப்ரவரி 11, 1996 - இலங்கை இராணுவத்தினரால் குழந்தைகள் உட்பட 26 பேர் திருகோணமலை குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர்.
- பெப்ரவரி 17, 1990 - இலங்கையின் ஊடகவியலாளர் ரிச்சர்ட் டி சொய்சா கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
- பெப்ரவரி 19, 1986 - அம்பாறை உடும்பன்குளம் படுகொலை: அம்பாறையின் உடும்பன்குளத்தில் 60 விவசாயிகள் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.