வலைவாசல்:தமிழிலக்கியம்/இலக்கியவாதிகள்/6

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனுஷ்ய புத்திரன்

மனுஷ்ய புத்திரன் (பிறப்பு - 1968) என்ற பெயரில் எழுதிவரும் எஸ். அப்துல் ஹமீது திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தார். எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கினார். பத்திரிகை ஆசிரியர், கவிஞர், இலக்கியவாதி என பன்முக முகங்களை கொண்டவர் மனுஷ்ய புத்திரன். இவர் 20 ஆண்டுகளாக இலக்கியப் பணியில் அயராது ஈடுபட்டு வருகின்றார். தற்போது சென்னையில் வசிக்கிறார். உயிர்மை பதிப்பகம், உயிர்மை இதழை நடத்தி வருகிறார்.

மனுஷ்ய புத்திரன் துவரங்குறிச்சி, திருச்சி மாவட்டத்தில் 15 மார்ச் 1968 அன்று நான்கு குழந்தைகளில் இரண்டாவதாக பிறந்தார்.