வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/7

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேமிசந்திரர்
நேமிசந்திரர்

நேமிசந்திரர் சமணத்தின் திகம்பர சமயப் பிரிவின் அறிஞராவார். இவர் திரவியசங்கிரகம், கோமத்சாரம், சீவகாண்டம், கர்மகாண்டம், திரிலோகசாரம், லப்திசாரம் மற்றும் கச்சபனசாரம் போன்ற சமணத் தத்துவ நூல்களை இயற்றியுள்ளார். திகம்பர சமண ஆச்சாரியர் நேமிசந்திரர் கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழுடன் விளங்கியவர். பொதுவாக இவரைச் சித்தாந்தச் சக்கரவர்த்தி என்றே அழைப்பர்.

இவர் சவுந்தரய்யாவின் ஆன்மீக குருவாக விளங்கியதோடு இவர்களின் தொடர்புகள் பற்றி, கர்நாடகாவின் சிமோகோ மாவட்டத்த்தின், நகர் தாலுக்காவில் உள்ள பத்மாவதி கோயில் கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் அறியக்கூடியதாயுள்ளது.