வண்ணம் (யாப்பருங்கல நெறி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்காப்பியர் 20 வகை வண்ணங்களைக் குறிப்பிடுகிறார். யாப்பருங்கலம் என்னும் நூலின் விருத்தியுரையில் பாடல்களில் காணப்படும் வண்ணங்கள் மேற்கோள் பாடல்களுடன் விளக்கப்பட்டுள்ளன. [1]

வண்ணம் - எடுத்துக்காட்டுடன்[தொகு]

1[தொகு]

உயிர் மிக்கு வந்த வண்ணம்
ஐயாவோ ஐயாவோ எய்யாயோ எய்யாயோ
கையாயோ ஐய களிறு
ஐயா! களிற்றை எய்யமாட்டாயா

2[தொகு]

மெய் மிக்கு வந்த வண்ணம்
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

3[தொகு]

உயிர்மெய் மிக்கு வந்த வண்ணம்
படைகுடி கூழ்அமைச்சு நட்புஅறன் ஆறும்
உடையான் அரசருள் ஏறு

4[தொகு]

குறிலெழுத்து மிக்கு வந்த வண்ணம்
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

5[தொகு]

நெடில் எழுத்து மிக்கு வந்த வண்ணம்
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு

6[தொகு]

அளபெடை பெற்று வந்த வண்ணம்

ஏஎர் சிதைய அழாஅல் எலாஅநின்
சேயரி சிந்திய கண்

7[தொகு]

வல்லினம் மிக்கு வந்த வண்ணம்
தெறுக தெறுக தெறுபகை தெற்றால்
பெறுக பெறுக பிறப்பு

8[தொகு]

மெல்லெழுத்து மிக்கு வந்த வண்ணம்
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்

9[தொகு]

இடையெழுத்து மிக்கு வந்த வண்ணம்
வயல்உழுவார் வாழ்வாருள் வாழ்வார் அயல்உழுவார்
வாழ்வாருள் வாழா தவர்

10[தொகு]

குற்றியலுகரம் மிக்கு வந்த வண்ணம்
குருத்துக் குறைத்துக் கொணர்ந்து நமது
கருப்புச் செறுப்புப் பரப்பு
கரும்பின் குருத்தை வெட்டி எறிந்துவிட்டு
வயலில் பரப்பு

11[தொகு]

குற்றியலிகரம் வந்த வண்ணம்
குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளாத வர்
சிலையன் செழுந்தழையன் சென்மியா என்று
மலையகலான் மாடே வரும்

அவன் தழையாடையுடன் வருகிறான்

12[தொகு]

ஆய்த வண்ணம்
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்

13[தொகு]

ஐகாரக்குறுக்க வண்ணம்
படுமழைத் தண்மலை வெற்பன் உறையும்
நெடுந்தகையைக் கண்டதாம் நாள்
வெற்பனை ஒருநாள் பார்த்தேன்

14[தொகு]

ஔகாரக் குறுக்க வண்ணம்
நௌவிமான் நோக்கினார் அவ்வாய் மணிமுறுவல்
வௌவாதார் கௌவை இலர் [2]
ஔவித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தௌவையைக் காட்டி விடும்

15[தொகு]

மகரக் குறுக்க வண்ணம்
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்
தாம்வீழ்வார் தம்வீழப் பெறவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி [3]

மேற்கோள்[தொகு]

  1. அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 23, 24
  2. அவள் முறுவலை பெற்றால் அலர் தூற்றுவர் பெறாதவர்க்கு அலர் இல்லை
  3. நான் விரும்பியவர் என்னை விரும்பினால் காமம் என்னும் பழத்தை விதை இல்லாமல் பெறலாம்