வடக்கு பச்சையாறு அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிரம்பும் தருவாயில் வடக்கு பச்சையாறு

பச்சையாறு அணை திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பச்சையாற்றின் குறுக்கே கட்டப்பட்டு 2004ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இதன் முழு கொள்ளளவு 50 அடியாகும்.வடகிழக்கு பருவமழையின் போது அதிகப்படியான நீரானது கிடைக்கிறது. இந்த அணைக்கு மேல வடகரை மற்றும் மஞ்சுவிளை வழியாக செல்லலாம். அல்லது அம்பேத்கர் நகர் வழியாயும் செல்லலாம்.

அமைப்பு மற்றும் கொள்ளளவு[தொகு]

இந்த அணையானது 3110மீ நீளம் மண் அணை மற்றும் கல்லணையுடன் கூடிய நீா்தேக்கம் 20.20 மீட்டா் உயரத்தில் 442 மில்லியன் கனஅடி கொள்ளளவில் கட்டப்பட்டது.இதுவரை 2009,2014,2015,2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் அணை அதன் கொள்ளளவான 50 அடியை எட்டியது.

நீரியல் விவரங்கள்[தொகு]

  • அட்சரேகை – 08°32'51.3"வ
  • தீா்க்கரேகை – 77°31'09.5"கி
  • நீா்வடியும் பரப்பு – 35.09 ச.கி.மீ
  • நீா்பிடிப்பு பரப்பு – 184.52 ஹெக்டோ் .
  • கொள்ளளவு – 12.506 மி.கனமீட்டா் / 422 kp.f.mb
  • மதகு எண்ணிக்கை / திறப்பின் அளவு – 2 எண்ணம் 1.20 kP x 1.80 kP
  • வழிந்தோடியின் வகை / நீளம் – கட்டுபாடற்றது / 122.000 மீ
  • வழிந்தோடியின் வெளியேற்றும் திறன் – 17066கனஅடி / வினாடிக்கு

பாசனவசதி பெறும் இடங்கள்[தொகு]

இந்த அணையின் மூலம் களக்காடு முதல் நாங்குநேரி வரையிலான 100 க்கு மேற்பட்ட குளங்களும் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் பயன் பெறுகின்றன.

நீர்வரத்து[தொகு]

இந்த அணைக்கு தண்ணீரானது தலையணை தேங்காய் உருளி ஊட்டுக்கால்வாய் மூலமாகவும் நீர்பிடிப்பு பகுதிக்கு கீரைக்காரன் கால்வாய் மூலமாக நேரடியாகவும் வருகிறது.

அருகிலுள்ள கிராமங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_பச்சையாறு_அணை&oldid=3741286" இலிருந்து மீள்விக்கப்பட்டது