லீலா சுமந்த் மூல்கோகர்
லீலா சுமந்த் மூல்கோகர் Leela Sumant Moolgaokar | |
---|---|
பிறப்பு | 10 அக்டோபர் 1916 |
இறப்பு | 20 மே 1992 | (அகவை 75)
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | சமூக சேவை |
வாழ்க்கைத் துணை | சுமந்த் மூல்கோகர் |
லீலா சுமந்த் மூல்கோகர் (Leela Sumant Moolgaokar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சமூக சேவகர் ஆவார். 1916 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் நாள் பிறந்தார். இந்தியாவில் தன்னார்வ இரத்தமாற்ற சேவைக்கு முன்னோடியாக இவர் அறியப்பட்டார். [1] இவரது கணவர் சுமந்த் மூல்கோகர் டாடா மோட்டார் நிறுவனத்தின் தலைவராகவும் டாடா எஃகு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார். [2]
மும்பையின் செயின்ட் சியார்ச்சு மருத்துவமனையில் லீலா கதிர்வீச்சுப் படவரைவாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். [1] 1965 ஆம் ஆண்டில், டாடா மோட்டார் நிறுவன கிரகனி சமூக நலச் சங்கத்தை தொடங்கினார். இச்சங்கம் நிறுவன ஊழியர்களின் வீட்டில் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்களை உருவாக்கியது.. [3]
லீலாவின் சேவைகளைப் பாராட்டும் விதமாக 1963 ஆம் ஆண்டு இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பத்மசிறீ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. [4] இவர் 1975-76 ஆம் ஆண்டு காலத்தில் பம்பாயின் மாநகரத் தலைவராகவும் இருந்தார். [1]
லீலா சுமந்த் மூல்கோகர் 1992 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் நாள் காலமானார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "Leela Moolgaokar (1916-1992)". Tata Central Archives. Archived from the original on 2015-01-08. பார்க்கப்பட்ட நாள் 2014-09-04.
- ↑ Tata Central Archives. "Leela Moolgaokar". Archived from the original on 2008-07-19. பார்க்கப்பட்ட நாள் 2 September 2014.
- ↑ Citizens at Work Vol.3. TERI Press. 2007. pp. 117–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7993-116-5.
- ↑ "Padma Awards Directory (1954–2013)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 29 August 2014.