ரெவரெண்ட் வில்லியம் டெய்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேதகு வில்லியம் டெய்லர் இவர் சமயப் பணியாளராக 1815 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தார்.

கல்விப் பணி[தொகு]

வேதத்தாட்சி என்ற நூலைத் தமிழில் வெளியிட்டுள்ளார். இது 1834 இல் சென்னையில் அச்சிடப்பட்டது. ஐரோப்பியர் தமிழ் கற்க வசதியாக இருக்க , இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல்களை வெளியிட்டார்.

தமிழ்ப் பணி[தொகு]

  1. வெற்றி வேற்கையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இம் மொழிபெயர்ப்பு தமிழில் உள்ள கீழைநாட்டு வரலாற்றுக் கையேடுகள் (1835—பதிப்பு ) என்ற பகுதியில் பிரிவில் தொகுதி 11 இல் சேர்க்கப்பட்டுள்ளது.
  2. கீழைநாட்டு வரலாற்றுச் சார்பான கையெழுத்துப் படிகளை மொழிபெயர்த்துள்ளார்.
  3. இராட்லர் அகராதியின் மூன்று, நான்கு பாகங்களை நிறைவு செய்துள்ளார்.
  4. தமிழ்க் கையேடுகளுக்கு அட்டவணை தயார் செய்துள்ளார்.

மொழிபெயர்ப்புக்குச் சான்று[தொகு]

கல்விக்கு அழகு கசடறக் கற்றல் --- என்பதற்கு the beauty of learning is learning without fault

பார்வை நூல்[தொகு]

ஐரோப்பியர் தமிழ்ப்பணி, பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரம். சென்னைப் பல்கலைக்கழகம் -- 2௦03