ரெவரெண்ட் வில்லியம் டெய்லர்
மேதகு வில்லியம் டெய்லர் இவர் சமயப் பணியாளராக 1815 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தார்.
கல்விப் பணி[தொகு]
வேதத்தாட்சி என்ற நூலைத் தமிழில் வெளியிட்டுள்ளார். இது 1834 இல் சென்னையில் அச்சிடப்பட்டது. ஐரோப்பியர் தமிழ் கற்க வசதியாக இருக்க , இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல்களை வெளியிட்டார்.
தமிழ்ப் பணி[தொகு]
- வெற்றி வேற்கையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இம் மொழிபெயர்ப்பு தமிழில் உள்ள கீழைநாட்டு வரலாற்றுக் கையேடுகள் (1835—பதிப்பு ) என்ற பகுதியில் இ பிரிவில் தொகுதி 11 இல் சேர்க்கப்பட்டுள்ளது.
- கீழைநாட்டு வரலாற்றுச் சார்பான கையெழுத்துப் படிகளை மொழிபெயர்த்துள்ளார்.
- இராட்லர் அகராதியின் மூன்று, நான்கு பாகங்களை நிறைவு செய்துள்ளார்.
- தமிழ்க் கையேடுகளுக்கு அட்டவணை தயார் செய்துள்ளார்.
மொழிபெயர்ப்புக்குச் சான்று[தொகு]
கல்விக்கு அழகு கசடறக் கற்றல் --- என்பதற்கு the beauty of learning is learning without fault
பார்வை நூல்[தொகு]
ஐரோப்பியர் தமிழ்ப்பணி, பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரம். சென்னைப் பல்கலைக்கழகம் -- 2௦03