மேவனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிபாளையத்திற்கு அருகில் பவானி நதிக்கரையில் மேவனை என்ற கிராமம் அமைந்துள்ளது. விவசாயம் முதன்மையான தொழில். இந்த கிராமத்தைச் சுற்றிலும் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் இவ்விடத்திற்கு அருகில் உள்ளது. ஒரு பாலம் மேவனை கீழ்வனையை இணைக்கிறது. ஆற்றின் மறுபக்கம் இக்கிராமம் அமைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பல முக்கியமான திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. கரகாட்டக்காரன், சொன்னாபுரியாது போன்ற படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. நெல், கரும்பு அதிகம் விளைவிக்கப்படுகிறது. நீர் ஆதாரம் பவானி ஆற்றிலிருந்து கிடைக்கிறது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேவனை&oldid=3598948" இலிருந்து மீள்விக்கப்பட்டது