மருதன் (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மருதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மருதன் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய மருதன் இதுவரை பன்னிரண்டு நூல்கள் எழுதியிருக்கிறார். பிடல் காஸ்ட்ரோ: சிம்ம சொப்பனம், சே குவேரா: வேண்டும் விடுதலை, ஹ்யூகோ சாவேஸ்: மோதிப்பார்! ஆகியவை அவற்றுள் புகழ் பெற்றவை.

கல்கி, நக்கீரன், ரிப்போர்ட்டர் இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்த மருதன், 2006ம் ஆண்டு முதல் கிழக்கு பதிப்பக்கத்தில் பணியாற்றி வருகிறார். தற்சமயம் அப்பதிப்பகத்தின் ஆசிரியராக உள்ளார்.

எழுதியுள்ள நூல்கள்[தொகு]

  • துப்பாக்கி மொழி (இந்தியத் தீவிரவாத இயக்கங்கள் குறித்த ஆய்வு.)
  • திபெத்: அசுரப்பிடியில் அழகுக் கொடி
  • பிடல் காஸ்டிரோ: சிம்ம சொப்பனம்
  • ஹ்யூகோ சாவேஸ்: மோதிப்பார்!
  • சர்வம் ஸ்டாலின் மயம்
  • மும்பை: குற்றத் தலைநகரம்
  • நேதாஜி: மர்மங்களின் பரமபிதா
  • சே குவேரா: வேண்டும் விடுதலை!
  • லெனின்: முதல் காம்ரேட்!
  • திப்பு சுல்தான் - முதல் விடுதலைப் புலி
  • விடுதலைப் புலிகள்

வெளியாகும் தொடர்கள்[தொகு]

  • வெற்றி மீது வெற்றி வர! (நக்கீரன் வாரமிருமுறை இதழ்)
  • என் பெயர் தென்றல் (கோகுலம் சிறுவர் மாத இதழ்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருதன்_(எழுத்தாளர்)&oldid=1548310" இலிருந்து மீள்விக்கப்பட்டது