மகாநந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாநந்தி
சிசுநாக வம்ச மன்னர்
ஆட்சிக்காலம்கிமு அண். 367 – அண். 345
முன்னையவர்நந்திவர்தனன்
பின்னையவர்மகாபத்ம நந்தன்
குழந்தைகளின்
பெயர்கள்
மகாபத்ம நந்தன்
தந்தைநந்திவர்தனன்

மகாநந்தி (Mahanandin) வட இந்தியாவின் மகத நாட்டை ஆண்ட சிசுநாக வம்சத்தின் இறுதி அரசன் ஆவார். இவரது மகன் மகாபத்ம நந்தன் மகதத்தில் நந்த வம்சத்தை நிறுவியர் ஆவார்.

வரலாறு[தொகு]

சிசுநாக வம்சத்தின் 9-வது மன்னராக நந்தி வர்தனனையும், அவரது மகன் மகாநந்தியை பத்தாவதும் மற்றும் இறுதி மன்னராக புராணங்கள் கூறுகிறது[1] சிசுநாக வம்சத்தின் மகாநந்திக்கும், கீழ் குலப்பெண்ணுக்கும் பிறந்த மகாபத்ம நந்தன் என்பவர், தனது தந்தையான மகாநந்தியைக் கொன்று, மகத நாட்டைக் கைப்பற்றி, நந்த வம்சத்தின் ஆட்சியை நிறுவினார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Smith 2008, ப. 37.
  2. Mookerji 1988, ப. 10.

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாநந்தி&oldid=3828209" இலிருந்து மீள்விக்கப்பட்டது