பேச்சு:குடநாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தற்போது தமிழ் நாட்டு முதலமைச்சர் கொடநாட்டில் இருக்கிறாரே அந்த கொடநாடும், இக்கட்டுரையின் தலைப்பான குடநாடும் ஒன்றுதானா? அப்படியென்றால் அதற்கும் இதற்கு வழிமாற்றுதரலாமே.--இராச்குமார் (பேச்சு) 10:55, 19 சூலை 2012 (UTC)[பதிலளி]

2ம் ஒன்றா எனத்தெரியவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:01, 19 சூலை 2012 (UTC)[பதிலளி]

ஆழ்ந்த தெளிந்த ஆய்வு அவசியம்[தொகு]

இராச்குமார் தென்காசி சுப்பிரமணியன்

அகம் 91 இல் மாமூலனார் கூறும் மழவர் இருந்த ஒடுங்காடு என்பது இன்று மலப்புரம் அருகே உண்டு.

இன்று அது தன் பெயரை இழந்து, ஊரின் குளம் மட்டும் ஒடுங்காட்டு குளம் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது

குடநாட்டின் வடவெல்லை, கிழக்கெல்லை எல்லாம் தெளிவாக தரமான ஆதாரங்களோடு கிடைத்துவிட்டன. விரைவில் அதனை இது தொடர்பான பிற சந்தேகங்கள் தெளிந்த பின்னர் அதனை இணைக்கின்றேன். தெற்கு அல்லை மட்டுமே குழப்புகின்றது. கொடுங்களூர் குடநாடா அல்லது குட்டநாட என்பதே அந்த சந்தேகம். பலர் ஆம் என்கின்றனர், சில தரமான ஆய்வாளர்கள் இல்லை என்கின்றனர். அந்த சிறு இடம் மட்டுமே குட்டம் - குடம் தெற்கு எல்லையில் மிக பெரும் குழப்பத்தை உண்டாக்குகின்றது. இதில் உங்கள் கருத்து என்ன தென்காசி சுப்பிரமணியன்???

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குடநாடு&oldid=1731241" இலிருந்து மீள்விக்கப்பட்டது