பெரும்பதுமனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரும்பதுமனார் சங்ககாலப் புலவர். இவரது பாடல்கள் நான்கு உள்ளன. அவை: குறுந்தொகை 7, நற்றிணை 2, 109, புறநானூறு 199. பதுமனார் என்று வேறொரு புலவரும் உள்ளார்.

பாடல்களில் வரும் செய்திகள்[தொகு]

ஆரியர் கயிறாடு பறை[தொகு]

அவள் தன் தாய்வீட்டை விட்டுவிட்டு அவனோடு அவன் ஊருக்குச் செல்கிறாள். வழியில் கண்டவர்கள் பேசிக்கொள்கின்றனர்.
அவன் காலில் கழல் இருக்கிறது. அவள் காலில் சிலம்பு ஒலிக்கிறது. அவர்கள் சொல்லும் வழியில் வாகைமரத்தின் வெண்மையான நெற்றுகள் ஒலிக்கின்றன.
ஆரியர் ஒற்றைக் கயிற்றின்மேல் ஏறி ஆடி வித்தை காட்டும்போது அவர்களின் பறை ஒலிப்பதுபோல் வாகை நெற்றுகள் ஒலிக்கின்றன.
செல்லும் இருவரில் அளியர்(கொடுத்துவைத்தவர்) யார்? - குறுந்தொகை 7

வை எயிற்று ஐயள்[தொகு]

இவள் புன்முறுவலோடு முன்னே செல்கிறாள். இவன் பின்தொடர்கிறான். வழி காய்ந்துபோன ஈந்துமுள் காடு. வழியில் சென்றவரைக் கொன்று தின்ற நெய்த்தோர் வாயுடன் குட்டி-வல்லியம் தண்ணீருக்காக மரலைத் தொடரும் காடு. இந்த வழியில் இவளை அழைத்துக்கொண்டு செல்லும் இந்த இளையோன் உள்ளம் மின்னி இடித்து மலைமேல் விழும் இடியைக்காட்டிலும் கொடியது. - கண்ட வழிப்போக்கர்கள் இவ்வாறு பேசிக்கொள்கின்றனர். - நற்றிணை 2

உச்சிக் கட்டிய கூழை ஆ[தொகு]

உச்சிப்பொழுது வெயிலில் கட்டிப்போட்டு வைத்திருக்கும் கூழைப்பசு போல அவர் பிரிந்து சென்றுள்ளபோது துடிக்கிறேன் எனத் தெரிந்துகொள் - தோழிக்குத் தலைவி தன் நிலையை விளக்குகிறாள்.
கூழை ஆ = கன்று போடும் பசு. (கூழைப்படை = பின்படை)
- நற்றிணை 109

பெருஞ்செய் ஆடவர்[தொகு]

செயல் தனக்காகச் செய்யப்படும்.
பெருஞ்செயல் பிறருக்காகச் செய்யப்படும். இது கொடை.
பழுத்திருக்கும் ஆலமரத்தை நாடும் பறவைகள் நேற்று வந்து தின்றோமே என்று இன்று வராமல் இருப்பதில்லை. அது போலத்தான் இரவலரும். பெருஞ்செய் ஆடவரிடம் மீண்டும் செல்வர். - புறநானூறு 199
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரும்பதுமனார்&oldid=3198647" இலிருந்து மீள்விக்கப்பட்டது