பூவண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூவண்ணன்
பிறப்புவே. தா. கோபாலகிருஷ்ணன்
தமிழ்நாடு
புனைபெயர்பூவண்ணன்
தொழில்எழுத்தாளர், பேராசிரியர்
தேசியம்இந்தியர்
கல்விமுனைவர்
வகைகுழந்தைகள் இலக்கியம்

பூவண்ணன் (இயற்பெயர் வே. தா. கோபாலகிருஷ்ணன்) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் தமிழ்ப் பேராசிரியரராவார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார். 1955 இல் குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட நாடகப் போட்டியில் இவர் எழுதிய உப்பில்லாத பண்டம் முதல் பரிசைப் பெற்றது. மேலும் இவர் எழுதிய ஆலம் விழுது, காவேரியின் அன்பு ஆகிய இரண்டு சிறார் நெடுங்கதைகளும் நம்ம குழந்தைகள், அன்பின் அலைகள் என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு. இந்தப்படங்களுக்காக பூவண்ணனுக்கு தமிழக அரசின் சிறந்த திரைப்படக் கதாசிரியர் விருது கிடைத்தது..[1]

எழுதிய நூல்கள் சில[தொகு]

  1. அதிசயப்பானையும் அற்புதச்சேவலும்; 1980; வானதி பதிப்பகம், சென்னை; பக்.90.
  2. ஆலம் விழுது
  3. உப்பில்லாப் பண்டம் (நாடகம்)
  4. காவேரியின் அன்பு
  5. குழந்தை இலக்கிய வரலாறு
  6. குழந்தைக்கவிஞர் வள்ளியப்பா (வாழ்க்கை வரலாறு); 1982 நவம்பர்; வானதி பதிப்பகம், சென்னை.
  7. சபாஷ் மணி, (நெடுங்கதை), 1949 நவம்பர்; குழந்தைப் பதிப்பகம், சென்னை.
  8. சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
  9. நேதாஜி கதை (வாழ்க்கை வரலாறு)
  10. வீரமணி (நெடுங்கதை)

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆதி வள்ளியப்பன் (15 நவம்பர் 2016). "சிறார் இலக்கியச் சாதனையாளர்கள்". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 20 நவம்பர் 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவண்ணன்&oldid=3487358" இலிருந்து மீள்விக்கப்பட்டது