பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூதலிங்கசுவாமி கோயில் என்பது கன்னியாகுமரி மாவட்டத்தின் பூதப்பாண்டியில் அமைந்துள்ள சிவாலயமாகும். [1]

இக்கோயில் நாகர்கோவிலிலிருந்து வடக்கே 10 கி.மீ தொலைவில் பழையாற்றின் மேற்குக் கரையில் தாடகை மலையின் அடிவாரத்தில் உள்ளது. இக்கோயில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. [1] சுமார் அறுநூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது என்கின்றனர். [1]

சந்நிதிகள்[தொகு]

இக்கோயிலில் மூலவர் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். அம்மன் சிவகாமியம்மை. உள்பிரகாரத்தில் விநாயகர், முருகர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர் முதலிய சன்னிதிகள் உள்ளன.

அமைப்பு[தொகு]

மூலஸ்தானம் அமைந்துள்ள பாறையைச் சுற்றிலும் எழுப்பட்டிருக்கும் கற்சுவர் ஒரு சிறிய கோட்டையின் தோற்றத்தை கொண்டிருக்கும். கோயிலின் வடக்கே திருக்குளம் உள்ளது. இவ்வாலயத்திற்கு விமானம் இல்லை. செட்டி மண்டபத்தில் இரு துவாரகர்கள் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

விழாக்கள்[தொகு]

  • பௌர்ணமி விசேச பூஜை
  • பிரதோஷ வழிபாடு
  • அமாவசை கிரிவலம் [1]
  • தைமாதத்தில் பிரமோற்சவம்
  • ஐப்பசியில் திருக்கல்யாண உற்சவம் நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 மலர், மாலை (3 டிச., 2021). "பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி திருக்கோவில்- கன்னியாகுமரி". www.maalaimalar.com. {{cite web}}: Check date values in: |date= (help)