புலித்தடம் தேடி (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புலித்தடம் தேடி 2013 ஆம் ஆண்டு, விகடன் பிரசுரத்தால் வெளியிடப்பட்ட தமிழ் நூலாகும். மகா. தமிழ்ப் பிரபாகரன் எனும் இளம் எழுத்தாளர், ஜூனியர் விகடனில் தொடராக எழுதிய பயணக் கட்டுரையின் பகுதிகள் தொகுக்கப்பட்டு இந்நூல் வெளியிடப்பட்டது.

2009 போருக்கு பிந்தைய இன்றைய இலங்கையின் நிலைமைகளுக்குள் 25 நாட்கள் பயணம் செய்து இந்நூலை எழுதியுள்ளார் நூல் ஆசிரியர். தான் இலங்கை ராணுவத்தின் விசாரணைக்குள்ளாகி அதிலிருந்து மீண்டு வந்ததை இப்புத்தகத்தின் முதல் பகுதியாக குறிப்பிடுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

மகா. தமிழ்ப் பிரபாகரன் எழுதிய 'புலித்தடம் தேடி...' எனும் நூல் (முதற் பதிப்பு, மே 2013; வெளியீடு: விகடன் பிரசுரம், சென்னை - 2.)

"https://ta.wikipedia.org/w/index.php?title=புலித்தடம்_தேடி_(நூல்)&oldid=3222029" இலிருந்து மீள்விக்கப்பட்டது