பாரதி பாஸ்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரதி பாஸ்கர் என்பவர் தமிழ்ப் பேச்சாளர். சன் தொலைக்காட்சி நடத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சி மூலமாகப் பிரபலமானவர். 'வாங்க பேசலாம்' என்னும் சன் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.[1][2]

படிப்பும் பணியும்[தொகு]

அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரியில் வேதிப்பொறிஞர் பட்டமும், அண்ணா பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை முதுகலைப் பட்டமும் பெற்றார். சிட்டி வங்கியில் துணைத் தலைவராக பணியாற்றுகிறார்.

எழுத்துப் படைப்புகள்[தொகு]

கல்கியில் சிறுகதைகள், தினமணியில் கட்டுரைகள், அவள் விகடனில் 'நீ நதி போல ஓடிக்கொண்டிரு' என்ற தொடர்கட்டுரை ஆகியவற்றை எழுதியுள்ளார். சிறகை விரி, பற, அப்பா என்னும் வில்லன் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.[3]

மேற்கோள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரதி_பாஸ்கர்&oldid=3916856" இலிருந்து மீள்விக்கப்பட்டது