பாபேல் கோபுரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாபேல் கோபுரம் பைபிள் தொன்மங்களில் வரும் ஒரு கட்டிடம் ஆகும். அந்த கதை பின்வருமாறு. முன்பொரு காலத்தில் மனிதர் அனைவரும் ஒரே மொழியைப் பேசினர். ஒருமுறை சொர்க்கம் வரை உயரத்தக்க ஒரு கோபுரத்தை மனிதர் கட்டத் தொடங்கினர். அவ்வாறு கட்டிக் கொண்டிருந்த போது மனிதரின் ஆக்க செயற்பாட்டைக் கண்டு இறை கோபம் கொண்டது. அதனால் அவர்கள் வெவ்வேறு மொழிகள் பேசி சிரமப்படட்டும் என்று சாபம் இட்டது. அன்றிலிருந்தே மனிதர் வெவ்வேறு மொழிகள் பேசினர் என்றும், இது மனிதருக்கு கிடைத்த சாபம் என்றும் பைபிள் தொன்மம் கூறுகிறது.