பயனர்:TNSE SRI NGP/மணல்தொட்டி
உலக கடவுச்சொல் தினம்என்பது பலரும் தங்களுடைய தகவல் பரிமாற்றத்திலும் நிதி தொடர்பான பரிமாற்றத்திலும் பயன்படுத்தும் கடவுச்சொல்லை எவ்வாறு பாதுகாப்பாக அமைப்பது தொடர்பான ஒரு விழிப்புனர்வை ஏற்படுத்த இணைய முன்னோடிகளினால் கொண்டாடப்படும் ஒரு தினம் ஆகும்.
கடவுச்சொல்[தொகு]
கடவுச்சொல் என்பது வளங்களை பயன்படுத்த உள்நுழைவதற்கான அங்கீகாரம் வழங்குவதற்கு நாம் மட்டும் பயன்படுத்தும் வகையில் நம்மால் உருவாக்கப்படக்கூடிய வார்த்தை அல்லது எண்குறிகளின் கோவைகள்(character)ஆகும் .
உலக கடவுச்சொல் தினம்[தொகு]
உலகெங்கும் கடவுச்சொல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, பாதுகாப்பான கடவுச்சொல்லை அமைப்பதற்கும்,அதனை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மாற்றம் செய்வது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் மே மாதம் முதல்வியாழக்கிழமை உலக கடவுச்சொல்தினமாக கொண்டாடப்படுகிறது.
பொதுவாக பயன்படுத்தப்படும் கடவுச்சொற்கள்[தொகு]
2013 ஆம் ஆண்டின் கூகுள் அறிவிக்கையின்படி
- மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்
- முக்கிய நாட்கள் (பிறந்த தினம், திருமண நாள்)
- கடவுச்சொல் (PASSWORD)
போன்ற மிகவும் எளிதில் திருட வாய்ப்பிருக்கும் கடவுச்சொற்களை பயன்படுத்துவதாக தெரிவிக்கிறது.
பாதுகாப்பான கடவுச்சொல்[தொகு]
முதன்முதலில் கடவுச்சொல்லை பயன்படுத்த தொடங்கியபோது பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது கடவுச்சொல்(PASSWORD) என்பதனையும் 123456 என்பதனையுமே கடவுச்சொல்லாக பயன்படுத்தினர்.இதனை மிக எளிதில் திருட முடிந்தது
ஆனால் இன்றைய காலங்களில் நாம் கடவுச்சொல்லை பல்வேறு கணக்குகளில் பயன்படுத்துகிறோம்.
அவையாவன,
- கூகிள்
- மின்னஞ்சல்
- சாம்சங் கணக்கு
- கட்செவி
- முகப்புத்தகம்
எனவே அவற்றை மிக கவனமாக அமைப்பது அவசியம். அதற்கு,கீழ்கண்ட வ்ழிமுறைகளை பயனபடுத்தலாம்
- பெரிய மற்றும் சிறிய எழுத்துகளில் அமைக்க வேண்டும்,
- எண்கள், வடிவங்களையும் சேர்த்து உருவாக்க வேண்டும்.
- ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அதனை மாற்றம் செய்ய வேண்டும்.
எவ்வாறு பாதுகாப்பது:[தொகு]
- நச்செதிர்நிரல் (ANTIVIRUS) பயன்படுத்துவது.
- கடவுச்சொல்லை பிறரிடம் பகிராமல் இருப்பது நல்லது.
- பிறருடைய கணினியை பயன்படுத்தும்போது அதில் கடவுச்சொல்லை தன்னிச்சையாக சேமிக்க கூடாது.
- பல அடுக்கு அரண்களை அமத்தல்.
- ஒன் டைம் பாஸ்வேர்டு (OTP)
- குறிப்பு கேள்விகளை கேட்கச் செய்தல்
- பாங்கு அமைத்தல்( PATTERN LOCK)
ஒழுங்குமுறை கொந்தர்கள்:(Ethical Hacker)[தொகு]
குற்றவியல் கொந்தர்கள்(Criminal Hacker) புரியும் தகவல் திருட்டுகளை தடுக்க ஒலுங்குமுறை கொந்தர்களை அரசின் பாதுகாப்புத்துறை, தடய அறிவியல் துறை, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த வேலை வாய்ப்பை அளிக்கின்றன.
ஒழுங்குமுறை கொந்தர்கள் கல்வி பயிற்றுவிக்கும் இந்திய நிறுவங்கள்:[தொகு]
- அலகாபாத் ஐ.ஐ.டி
- சண்டிகர் ஐ.ஐ.டி
- இந்திராகாந்தி திறந்த நிலைப் பல்கலைக்கழகம்.
கல்வித்தகுதி: இளநிலை பொறியாளர் அல்லது மேல்நிலை கணிதம் அல்லது எம்.சி.ஏ முடித்தவர்கள் இதனை படிக்கலாம்.
==மேற்கோள்கள்==